ராமநாதபுரம்: அரசால் விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை கடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்ட, கடலோர காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட சுறா பீலி (சுறா துடுப்பு), கடல் அட்டை, ஏலக்காய் ஆகியன சரக்கு வாகனத்தின் மூலம் கீழக்கரைக்கு நேற்று (ஜூன் 28) கடத்திக் கொண்டு வரப்பட்டன.