தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2021, 1:20 PM IST

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,225 கிலோ மஞ்சள் பறிமுதல்!

ராமநாதபுரம் மண்டபத்தை அடுத்த குஞ்சார்வலசையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,225 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,225 கிலோ மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,225 கிலோ மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் முதல் போதைப் பொருள்கள்வரை இலங்கைக்கு கடத்திச்செல்வது தொடர்ந்து நடபெற்றுவருகிறது.

1,225 கிலோ மஞ்சள் பறிமுதல்

இந்நிலையில் நேற்று (ஜூலை 5) இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மண்டபத்தை அடுத்த குஞ்சார்வலசையில் மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மண்டபம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் மண்டபம் காவலர்கள் விரைந்துசென்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது குஞ்சார்வலசை எஸ். ராக்கம்மாள் (65) என்பவரது வீட்டில் தலா 25 கிலோ எடையுள்ள 49 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,225 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராக்கம்மாளிடம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:‘வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தான்’ - குடிபோதையில் போலீஸை கலாய்த்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details