தமிழ்நாடு அரசு நாளைமுதல் (ஏப்ரல் 10) ஏப்ரல் 30ஆம் தேதி வரை கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமயம் சார்ந்த வழிபாடு, கூட்டங்களுக்குத் தடை, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம்செய்வதைத் தவிர்த்தல், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுயுடன் செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் ராமநாதபுரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.