நாடு கரோனா ஊரடங்கின் மூன்றாவது கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், திங்கள்கிழமை (ஏப்.4) முதல் தமிழ்நாட்டில் அத்தியாவசிய கடைகள், செல்ஃபோன் சர்வீஸ் நிலையங்கள் உள்ளிட்ட கடைகளைக் காலை 11 மணி முதல் மாலை ஐந்து மணிவரை திறக்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுர மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் கூட்டமாகக் கடை வீதிகளுக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது.