தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றில் பறந்து ஊரடங்கு - ராமநாதபுர கடை வீதிகளில் நிரம்பி வழிந்த கூட்டம் - ramanathapuram people flood streets

ராமநாதபுரம் : மாவட்டத்தில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள் சூழலில், மக்கள் ஊரடங்கு விதிகளையோ, சமூக இடைவெளி நடைமுறையோ பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாகக் கடை விதிகளுக்குச் சென்று பொருள் வாங்கினர்.

rmd
rmd

By

Published : May 5, 2020, 9:36 AM IST

நாடு கரோனா ஊரடங்கின் மூன்றாவது கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், திங்கள்கிழமை (ஏப்.4) முதல் தமிழ்நாட்டில் அத்தியாவசிய கடைகள், செல்ஃபோன் சர்வீஸ் நிலையங்கள் உள்ளிட்ட கடைகளைக் காலை 11 மணி முதல் மாலை ஐந்து மணிவரை திறக்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுர மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் கூட்டமாகக் கடை வீதிகளுக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

அணி அணியாக தெருவில் பார்க் செய்யப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள்

ராமநாதபுரம் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, அரசு அறிவித்த அனுமதி அளித்த கடைகள் மட்டுமல்லாமல் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. கடையை மூடுமாறு ஒலி பெருக்கி மூலம் காவல் துறையினர், அரசு அலுவலர்கள் தொடர்ந்து அறிந்த பிறகே இந்தக் கடைகள் மூடப்பட்டன.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொறுப்பற்ற முறையில் மக்கள் நடந்துகொண்டால் கரோனா வைரஸை எப்படி வெல்ல முடியும் என காவல் துறையினர் கவலைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details