தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாயல்குடியில் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு! - ராமநாதபுரம் மாணவன் நீரில் மூழ்கி பலி

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே குளத்தில் நீச்சல் கற்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ramanathapuram-near-sayalkudi-school-student-died-by-drowning
சாயல்குடியில் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

By

Published : Dec 22, 2019, 7:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கடுகு சந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் குருபாலன், கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்தார்.

நேற்று மாலை நண்பர்கள் இருவருடன் குளத்தில் குளிக்கச்சென்று நீச்சல் பயின்றுவந்த நிலையில், நீந்தி மறுகரைக்குச் செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குளத்தின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனே நண்பர்கள் இருவரும் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் குருபாலன் நீரில் மூழ்கிவிட்டார்.

உடனடியாக சாயல்குடி தீயணைப்பு, மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புக் குழுவினர் குளத்தில் மூழ்கிய குருபாலனை மீட்கப் போராடினர். இதனிடையே 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருந்தது. ஒருவழியாக நீண்ட தேடுதலுக்குப் பின் குருபாலன் சடலமாக மீட்கப்பட்டார்.

சாயல்குடியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் சடலம் மீட்பு

உடலைக் கைப்பற்றிய சாயல்குடி காவல் துறையினர் உடற்கூறாய்வுக்கு கடலாடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது தொடர்பாக விசாரணை செய்துவருகின்றனர். நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

கழுத்தில் பாம்பு கையில் விலங்கு: பாம்பு வித்தை காட்டிய பெண் சாமியார் கைது!

ABOUT THE AUTHOR

...view details