தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்! - கடலாடி

ராமநாதபுரம் : கடலாடி அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்

கஞ்சாவினை பறிமுதல் செய்த காவல்துறை-குற்றவாளிகள் தப்பியோட்டம்
கஞ்சாவினை பறிமுதல் செய்த காவல்துறை-குற்றவாளிகள் தப்பியோட்டம்

By

Published : Mar 14, 2020, 3:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவினை பறிமுதல் செய்த காவல்துறை-குற்றவாளிகள் தப்பியோட்டம்

மேலும், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் கஞ்சாவினை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...

ABOUT THE AUTHOR

...view details