ராமநாதபுரம் மாவட்டம் முதுல்நாள், பொக்ரானேந்தல் உள்ளிட்ட 71 கிராமங்களில் புதிதாக நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணிகண்டன், சதன் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசின் நியாயவிலைக் கடைகளை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.