தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2021, 11:57 AM IST

ETV Bharat / state

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கல்!

ராமநாதபுரம்: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கமுதி தாலுக்காவிலுள்ள 190 பயனாளிகளுக்கு 4,750 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

Poultry chicks for farmers on behalf of the Department of Animal Husbandry!
Poultry chicks for farmers on behalf of the Department of Animal Husbandry!

ராமநாதபுரம் கமுதி, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் கமுதியைச் சேர்ந்த 70 பேர், பேரையூரைச் சேர்ந்த 60 பேர், நீராவியைச் சேர்ந்த 60 பேர் என மொத்தம் 190 பயனாளிகளுக்கு தல 25 கோழிக் குஞ்சுகள் வீதம் 4,750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கோட்டைமேடு கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் ஆ.ரவிச்சந்திரன் தலைமையின் கீழ், நீராவி கால்நடை மருத்துவர் மணிகண்டன் முன்னிலையில் வழங்கப்பட்டன.

தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு சோகத்தில் உள்ள கமுதி தாலுக்கா விவசாயிகளுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:காதல் மனைவி பிரிந்ததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details