தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்ரல்.6) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், நேற்றுடன் (ஏப்.04) இதற்கான தேர்தல் பரப்புரையும் ஓய்ந்தது.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அலுவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அம்மன் கோயில் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்தனர்.