ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளது. இதில் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகியோர் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் சென்ற மற்றொரு நபர், என்ஐஏவால் தேடப்பட்டு வரும் சேக் அப்துல்லா என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் சமீபத்தில் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பணப் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.