தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு குவிந்த மக்கள்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு அறிவிப்பினைத் தொடர்ந்து ராமநாதபுரம் கடைத்தெரு பகுதியில் பொருட்களை வாங்க மக்கள் கூட்ட கூட்டமாக குவிந்தனர்.

பொருட்களை வாங்க கடைத்தெரு பகுதிக்கு குவிந்த மக்கள் - ஊரடங்கு அறிவிப்பு!!
பொருட்களை வாங்க கடைத்தெரு பகுதிக்கு குவிந்த மக்கள் - ஊரடங்கு அறிவிப்பு!!

By

Published : May 9, 2021, 8:02 AM IST

இராமநாபுரம்:தமிழ்நாட்டில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு நாள்களுக்கு அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இதனையொட்டி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அரண்மனை, சந்தைப் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சில இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதை பார்க்க முடிந்தது. காவல்துறையினர் முக்கிய இடங்களில் நின்று மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அதிக நபர்கள் உள்ள கடைக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

இன்றும் கடைகள் திறந்து இருக்கும் என்பதால் பொதுமக்கள் நிதானமாக சென்று பொருட்களை வாங்கலாம் என்பதே அலுவலர்கள் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க:சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details