ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த பி.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இந்நிலையில், கார்த்திக் மனைவி சந்தியாவை சந்திக்க கோகொண்டான் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, கார்திக்கும்,மனைவி சந்தியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சந்தியாவை சராமரியாகத் தாக்கியுள்ளார். இதைக்கண்ட சந்தியாவின் பாட்டி காளியம்மாள் (70) சண்டையை விலக்குவதற்காகவும் சமாதானம் செய்யவும் சென்றுள்ளார். இதனால், ஆத்திமடைந்த கார்த்திக் அருகிலிருந்த கட்டையை எடுத்து மூதாட்டி காளியாம்மாவின் தலையில் தாக்கியுள்ளார்.