ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் , சிகிச்சைக்கான படுக்கை வசிதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
கரோனா பரவலை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாகவும் http://ramanathapuramfightscovid.com/ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்ட்டுள்ளது .