ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயளிகளுக்கு முறையாக உணவு, மருத்துவம் போன்றவற்றை அளிக்கவில்லை என, பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் நேற்று (மே.15) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமைச்சரிடம் வைத்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் அனைத்தும் உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், கரோனா வார்டில் இருக்கும் நோயாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.