தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2021, 9:35 AM IST

ETV Bharat / state

'பொது மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கரோனாவை ஒழிக்கலாம்' அமைச்சர் ராஜகண்ணப்பன்!

உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என, பொது மக்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Minister Raja Kannappan
அமைச்சர் ராஜகண்ணப்பன்

ராமநாதபுரம்: கரோனா முதல் அலையைப் போல இரண்டாவது அலையையும் கடந்து போக முடியும் என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.75 லட்சம் குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்களில், அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2 ஆயிரம் ரூபாயை நேற்று (மே.15) பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

முன்னதாகப் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முக்கியமான முதல் ஐந்து கோப்பில் கையெழுத்திட்டார். கரோனா பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நடவடிக்கை, ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தற்போது அதன் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா முதல் அலையைப் போல இரண்டாவது அலையையும் கடந்து போக முடியும். அரசுடன் ஒத்துழைத்து பொது மக்களும் செயல்பட்டால் கரோனாவைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

இதில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details