ராமநாதபுரம்:சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த முதுகுளத்தூர் மணிகண்டன்தாயார் ராமலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல்செய்துள்ளார். அதில், "எனது மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்றுவந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டனை கீழத்தூவல் காளி கோயில் அருகே காவலர்கள் லட்சுமணன், பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
கடுமையாகத் தாக்கிய காவல் துறையினர்
மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்திலிருந்து மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார்.
அதிகாலை 1.30 மணி அளவில் எனது மகன் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.
மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும்