ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (45). இவர் கடந்த 24 வருட காலமாக இந்திய ராணுவத்தில் பல்வேறு மாநில எல்லைகளில் பணியாற்றி பணி நிறைவுசெய்து இன்று (ஜன. 05) ஊர் திரும்பினார்.
அவர் தேசத்திற்கு ஆற்றிய சேவையைப் பெருமைப்படுத்தும் வகையில் திருவாடானை கடம்பாகுடி, கோனேரிகோட்டை உள்ளிட்ட கிராம இளைஞர்கள், ராமநாதபுரம் மருது சீமை பட்டாளத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று திருவாடானை பேருந்து நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வெடி வெடித்து, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருமண பந்தத்தை தாண்டிய உறவு: அக்காவைக் கொன்ற தம்பி போலீசில் சரண்!