தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடியிடம் ஒப்படைக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

ராமநாதபுரம்: வசந்த நகர் பகுதையைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Sep 8, 2020, 9:06 PM IST

இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க கோரி இந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தல்!
Young man dead case

ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் இல்லத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சென்றுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தை முஸ்லிம்கள் கட்டுக்குள் கொண்டுவர பெரிய திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய நிதி வந்து கொண்டிருக்கிறது.

இந்துக்களை, இஸ்லாமியர்கள் கைக்குள் வைத்துக்கொண்டு சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு துணை போகின்றனர். கன்னியாகுமாரி வில்சன் கொலையில் தொடர்புடைய இஸ்லாமியர்கள்தான் ராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலையில் முக்கிய குற்றவாளி.

உளவுத் துறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், இல்லையென்றால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதேபோல் ராமேஸ்வரம் கோயிலுக்கும் ஆபத்து உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், அருண் பிரகாஷை கொலை செய்த குற்றவாளிகளை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details