உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொடர் பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய அரசு ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால் கோயில்களைத் திறப்பதற்குத் தடை தொடருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்திலுள்ள ராமநாத சுவாமி கோயிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.