இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்களைச் சுற்றி வளைத்த மத்திய சுங்க புலனாய்வுத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக், ஃபாருக் என்பது தெரியவந்தது. மேலும் இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க புலனாய்வுத் துறையினர் துரத்தியதால் தங்கத்தை கடலில் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளனர்.