தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2021, 2:14 PM IST

ETV Bharat / state

'அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்'

ராமநாதபுரம்: அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் கூறியுள்ளார்.

Fisheries Giriraj Singh  Giriraj Singh Kishore  Giriraj Singh Minister of Fisheries, Animal Husbandry and Dairying of India  கிரிராஜ் சிங்  Giriraj Singh  கிரிராஜ் சிங் ஈடிவி பாரத் நேர்காணல்  கிரிராஜ் சிங் நேர்காணல்  மத்திய மீன்வளத்துறை அமைச்சர்  Giriraj Singh Interview With ETV Bharat
Giriraj Singh Interview

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் வருகை தந்திருந்தார். அப்போது, மீனவர்களைச் சந்தித்துவிட்டு முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோரிடம் ஈடிவி பாரத் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். அக்கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாது என்று திமுக கூறுகிறதே, அது பற்றி உங்களது கருத்து?

அதற்கான நேரம் வந்துவிட்டது. கண்டிப்பாக அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

முன்னாள் எம்பி அன்வர் ராஜா வீட்டிற்கு வருகைதந்த கிரிராஜ் சிங்

எத்தனை இடங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்?

பெரும்பான்மையான இடங்களைப் பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்.

இதையும் படிங்க:பாஜக வேட்பாளர் காரில் இவிஎம் இயந்திரங்கள்: 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details