ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி தர்காவுக்கு வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வந்து தங்கியிருந்து மனநல சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த தர்காவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா, கடந்தாண்டு (2020) கரோனா காரணமாகப் பக்தர்களின்றி நடைபெற்றது.
பக்தர்களின்றி நடைபெற்ற கொடியேற்றம்
இந்நிலையில், இந்தாண்டு சந்தனக்கூடு விழா வரும் ஜூலை 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவுக்கான கொடியேற்றம் நேற்று மாலை தர்கா வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.