ராமநாதபுரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனியார் மருத்துவ ஆய்வக பரிசோதகராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்களது மூத்த மகன் ஜெப்ரிரோஹித் (5), அதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார் (10) உள்ளிட்ட சிறுவர்கள் சிலருடன் நேற்று மாலை எம்.எஸ்.கே.நகர் தேவாலயம் அருகேயுள்ள ஒரு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர், திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிறுவர்கள் ஜெப்ரிரோஹித், மணீஷ்குமார், அப்பகுதியை சேர்ந்த பிரிசில்லா (31) என்ற பெண் ஆகியோர் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் அனுமதித்தனர்.