கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில், கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மீனவர்கள் வாரத்தில் 6 நாட்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். மேலும், மீன்பிடித்து கரைக்கு வந்தபிறகு காலை 7 மணிக்குள் மீனவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்று விட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.