ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது படகு மூலம் மோதி துன்புறுத்தி கொலை செய்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இறந்த நான்கு மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சமீபத்தில் கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட படகுகளை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.