வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, ஆகிய கடல் பகுதிகள் அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் - Fishermen back to sea
ராமநாதபுரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மீன் பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கடலுக்குச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள்
இதனால் 12 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடலில் தன்மை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதையடுத்து, இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தின் மூலமாக 540 படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.