ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், டீசல் விலை உயர்வு, கடலில் பிடிக்கப்படும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு வாரம் இருமுறை மட்டும் சென்று மீன்பிடிக்க மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும்,
- தமிழ்நாடு அரசு, உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும்,
- மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,
- இலங்கை கடற்படைப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது