தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் - 14 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்

ராமநாதபுரம் : 14 நாள்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

fishermen
fishermen

By

Published : Sep 19, 2020, 12:47 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், டீசல் விலை உயர்வு, கடலில் பிடிக்கப்படும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு வாரம் இருமுறை மட்டும் சென்று மீன்பிடிக்க மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும்,

  • தமிழ்நாடு அரசு, உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும்,
  • மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,
  • இலங்கை கடற்படைப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது

உள்ளிட்ட தீர்மானங்களையும் மீனவர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரண்டு வாரமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், வாரம் இருமுறை வீதம் இன்று (செப்.19) மீன்பிடிப்பைத் தொடங்கியுள்ளன.

ஆனால் இது குறித்து அரசுகள் நிலையான முடிவு எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details