தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2021, 2:51 AM IST

ETV Bharat / state

மகனை கொலை செய்த தந்தை கைது

ராமநாதபுரம்: குடிபோதையில் தன்னிடம் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

murder
murder

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 50). கூலி வேலை செய்துவருகிறார். அவரது மகன் லிங்கம் (25). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று இரவும் குடிபோதையில் தனது தந்தை முனியாண்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனியாண்டி அரிவாளால் லிங்கத்தை வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து முனியாண்டியை கைது செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details