தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2021, 8:55 AM IST

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் முதியவர் வெட்டிப் படுகொலை!

ராமநாதபுரம்: பூசேரி பாலம் அருகே முதியவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.

Ramanathapuram
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி அடுத்த மட்டியரேந்தல் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (65). இவர், நேற்றிரவு பூசேரி பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற மக்கள், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தேரிருவேலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 19 பேர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details