தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி: நாகையைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாம்பனில் தஞ்சம்! - ராமநாதபுரம் கரோனா பீதி: நாகையைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாம்பனில் தஞ்சம்

ராமநாதபுரம்: மீன்பிடிக்கச் சென்ற நாகையைச் சேர்ந்த 8 மீனவர்களை கரோனா அச்சத்தால் கொச்சினில் தரையிரங்க அனுமதிக்காததால் அவர்கள் பாம்பன் பகுதிக்கு வந்துள்ளனர்.

பாம்பன் வந்த எட்டு மீனவர்கள்
பாம்பன் வந்த எட்டு மீனவர்கள்

By

Published : Mar 31, 2020, 11:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் அருளானந்தம். இவருக்கு கொச்சினில் ஆழ்கடல் படகு ஒன்று உள்ளது. இந்த படகில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் நடுக்கடலில் இருந்ததால் கரோனா தொடர்பான எந்த செய்தியும் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள் நேற்று காலை வழக்கம்போல் கொச்சின் துறைமுகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், கேரள அரசு அவர்களை கரையில் இறங்க அனுமதிக்காததால் அவர்கள் நாகப்பட்டினம், மூக்கையூர் துறைமுகத்திற்குச் சென்றுள்ளனர்.

பாம்பன் வந்த எட்டு மீனவர்கள்

அங்கேயும் கரோனா அச்சத்தால் இறங்க அனுமதிக்காத அலுவலர்கள் பாம்பனிற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பாம்பன் துறைமுகத்திற்கு வந்த எட்டு மீனவர்களுக்கு அலுவலர்கள் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.

அதன் பின் அவர்களை தனிமைப்படுத்தி ராமநாதபுரம் கொண்டுச் சென்று தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத கடைகளுக்குச் சீல்

ABOUT THE AUTHOR

...view details