ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார். அப்போது மக்களின் குறைகளை புகார் பெட்டி மூலம் மனுவாக பெற்றார்.
தொடர்ந்து திருவாடானை பகுதியைச் சேர்ந்த சந்தியாகு என்ற விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளியின் மனுவினை எடுத்தார். அப்போது சந்தியாகுவிடம் ஸ்டாலின் பேசிய போது, தான் ஆசிரியர் தகுதி தேர்வில் 2013 வெற்றி பெற்றும், தனக்கு தற்போது வரை பணி வழங்கப்படவில்லை என சந்தியாகு தெரிவித்தார்.