தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

`கரோனா நெறிமுறைகளை முறையே செயல்படுத்திட வேண்டும்`

ராமநாதபுரம்: முழு ஊரடங்கின்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையே செயல்படுத்திட வேண்டும் என சுகாதார அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

By

Published : May 10, 2021, 9:17 PM IST

corona details
corona details

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 288 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில் 882 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர். கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்கிட ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நான்கு தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

மேலும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் கரோனா பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 425 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் உட்பட உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் அருகேவுள்ள குயவன்குடி கிராமத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் பயிற்சி மையக் கட்டடத்தில் கூடுதலாக கரோனா பாதுகாப்பு மையம் ஏற்படுத்தி போதிய படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்திட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் .

ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மையத்தில் 60 படுக்கைகள் அமைத்திடவும், பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்கள், சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், பணியாளர்களுக்குத் தேவையான கழிவறை வசதி, சுத்தமான குடிநீர் வசதி ஆகியவற்றை உறுதி செய்திடவும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

மேலும் , மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு சத்தான உணவு, தரமான முறையில் வழங்கிடவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உடனிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details