தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: ரத்துசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - அனைத்து மறவர் நல கூட்டமைப்பு

ராமநாதபுரம்: வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வலியுறுத்தி அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில், கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

flag
flag

By

Published : Mar 5, 2021, 6:49 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு சார்பில், கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றில் முக்கியமான இரண்டு:

  • வன்னியர்களுக்கு அதிமுக அரசு வழங்கியுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்,
  • சீர்மரபினர் சமுதாயத்திற்கு வழங்கப்படும் இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக டி.என்.டி. (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும்
    கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details