புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் 116 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இருப்பினும் அதில் 40 படகுகள் சேதமடைந்தன. குறிப்பாக தங்கச்சிமடம் சர்புதீன் என்பவரின் படகு பெரிய அளவில் சேதமடைந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று (டிச.7) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதன் செயலாளர் சேசுராஜ் தலைமை வகித்தார்.