தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செடியிலேயே முளைத்த பயிர்கள்: பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் - ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா.

இராமநாதபுரம்: கமுதி அருகே சோளம், நெல், கம்பு பயிர்கள் செடியிலேயே முளைத்ததால் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் செடியிலேயே முளைத்த பயிர்கள் : பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
ராமநாதபுரம் செடியிலேயே முளைத்த பயிர்கள் : பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

By

Published : Jan 18, 2021, 3:49 AM IST

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் கோவிலாங்குளம், கோவிலாங்குளம் பட்டி, கண்மாய் பட்டி, ஆரைகுடி உள்ளிட்ட ஊர்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.

இந்நிலையில் 5 ஆயிரம் ஏக்கர் நெல், சோளம் 3 ஆயிரத்து 500 ஏக்கர், கேழ்வரகு ஆயிரம் ஏக்கர், கம்பு 500 ஏக்கர் உள்ளிட்டவற்றில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 10 நாள்களாக பெய்த தொடர் மழையால் அனைத்தும் முளைக்க தொடங்கி விட்டன.

இதனால் நகை அடமானம் வைத்தும், வட்டிக்கு வாங்கியும் விவசாயத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் முழுவதும் நஷ்டமானது. இதனால் முளைத்த பயிர்களை நடுவில் போட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து அரசு உடனடியாக நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பேருந்து நிலையத்தில் உறங்கிய இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details