இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த ஜெய்லாணி, அவரது மனைவி சித்தி ரொகானா, ரமலன் பின் இபுராகீம், அவரது மனைவி அமன் ஜகாரியா, முகம்மது நஷீ்ர் இபுராகீம், அவரது மனைவி ஹமரியா, மரியோனா, அவரது மனைவி சுமிஷினி ஆகியோர் மார்ச் 24ஆம் தேதி ராமநாதபுரம் பாரதிநகர் பள்ளிவாசலுக்கு வந்தபோது கேணிக்கரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் வந்து ஊரடங்கை மீறி, மத பரப்புரையில் ஈடுபட்டதாக, இந்தோனேஷியர்கள் 8 பேரையும், அவர்களுக்கு உதவியதாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த மூமுன் அலி (47) என்பவரையும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த மூமுன் அலியை காவலில் எடுத்து விசாரிக்க கேணிக்கரை காவல்துறையினர் ராமநாதபுரம் 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.