ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் என உறுதி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறினார்.