தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2021, 5:36 PM IST

ETV Bharat / state

ஓரியூர் கண்மாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ராமநாதபுரம்: கண்மாய்க்குள் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் சடலம் கண்டெடுப்பு
ஆண் சடலம் கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினர் எஸ்.பி பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருந்த பிணத்தை மீட்க முயன்றனர்.

கரோனா அச்சத்தில் யாரும் உதவிக்கு வராததால், சடலத்தை மீட்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, தலைமை காவலர் செல்லத்துரை கண்மாய்க்குள் நீந்திச் சென்று சடலத்தின் காலில் கயிறு கட்டி இழுத்து வந்தார். சுகாதாரா சீர்கேடு நிறைந்த அக்கண்மாயில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் செல்லாத நிலையில், அங்கு சடலம் மிதந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சடலம் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது மீட்கப்பட்ட சடலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சோமாலியாவில் மனித வெடி குண்டு தாக்குதல் - ஆறு பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details