ராமநாதபுரம்:கடல் நீர் அவ்வப்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிறம் மாறுவது வழக்கம். சில சமயங்களில் கடலில் ஏற்படும் புயல் நிலநடுக்கம் போன்ற காரணங்களால் கடல் நீர் வேறு ஒரு நிறமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சற்றுத் தயங்குவார்கள்.
எனவே இந்த நிற மாற்றத்திற்கான காரணம் என்னவென்று அலுவலர்கள் ஆய்வுசெய்து தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சென்ற ஆண்டும் இதேபோல் கடலில் நிறம் மாறியது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிகழ்வுகளைக் கடலில் அவ்வப்போது பார்க்க முடியும். இதற்குக் காரணம், உயிரொளிர்வு (Bioluminescence) என்னும் தன்மைதான். ஓர் உயிரினம் மூலம் இயற்கையாக உருவாகும் ஒளியையே இப்படி அழைக்கின்றனர்.