ராமநாதபுரம் மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சப்ஜூனியர், ஜூனியர் பிரிவுகளுக்கான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகத்தின் செயலாளர் பிரபாகரன், துணைத் தலைவர் வழக்கறிஞர் அசோக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, சாயல்குடி ஆகிய பகுதிகளிலிருந்து 120 வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 10, 13, 15, 17 வயது பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக நடைபெற்றது. 10 வயது ஆண்கள் பிரிவில் கௌதம் என்ற வீரரும், 13,15, 17 வயது பெண்கள் பிரிவில் சமீரா பானு என்ற வீராங்கணையும் முதல் இடம் பெற்றனர்.