தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் மூழ்கிய படகு: மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

ராமநாதபுரம்: நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ramnad

By

Published : Sep 8, 2019, 7:09 PM IST

ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூர் சென்று புதிதாக படகு வாங்கிவிட்டு திரும்பும் வழியில் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் படகு மூழ்கியது. இந்த விபத்தில் படகில் இருந்த 10இல் எட்டு பேர் மாயமாகினர். இதில் நான்கு மீனவர்களை 4ஆம் தேதியன்று மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

மற்ற இரண்டு மீனவர்களைத் தேடும் பணியில் முன்னேற்றம் உள்ளதாகவும், மாலைக்குள் மீட்கப்படுவர் எனவும் ஆட்சியர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர்கள் காணாமல் போன ஐந்தாவது நாளான இன்று, மண்டபம் கடல் பகுதியில் இன்று மீண்டும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீட்கப்பட்ட உடலைப் பெறுவதற்காக மீனவரின் உறவினர்கள் நாட்டு படகில் நடுக்கடலுக்கு விரைந்துள்ளனர். இது இலங்கேஸ்வரன் உடலா, உமாகாந்த் உடலா என்பது கரைக்கு வந்த பிறகே தெரியவரும். மேலும், நேற்று மீட்கப்பட்ட மதன், கந்தக்குடியான் உடல்களைப் பெற உறவினர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details