ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயராம், வியாபாரத்திற்காக பாம்பன் பகுதியில் மீன் எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை காலை தேவக்கோட்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, மண்டபம் களஞ்சியம் கோயில் பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து செய்தித்தாள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மதுரை வாகன டிரைவர் மாரியப்பனும், ஜெயராமனும் படுகாயமடைந்தனர்.