தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2021, 3:48 PM IST

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்: சிறப்பாகச் செயல்பட்ட காவலர்கள்!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டைகளைக் காவல் துறையினர் இன்று (மார்ச் 5) பறிமுதல்செய்தனர்.

952 கிலோ கடல் அட்டை பறிமுதல்
952 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் படகு மூலம் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அவரது உத்தரவின்பேரில், ராமேஸ்வரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் மண்டபம் காவல் துறையினர் வேதாளை கடற்கரைப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

952 கிலோ கடல் அட்டைகள்

அப்போது, வேதாளை தெற்குத் தெருவைச் சேர்ந்த அல்லாபிச்சை என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் சோதனையிட்டபோது, அங்கு பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சுமார் ஏழு மூட்டைகளிலிருந்த 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், 10-க்கும் மேற்பட்ட பேரல்களில் ஊறவைத்திருந்த 694 கிலோ கடல் அட்டைகள் என 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

952 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடல் அட்டைகளைப் பதுக்கிய நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

காவலர்களுக்குப் பாராட்டு

மேலும், பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினமான கடல் அட்டைகள் கடத்தப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்த, ராமேஸ்வரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையிலான காவலர்களை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:தனுஷ்கோடி கடல் பகுதியில் 8400 சித்தாமை முட்டைகள் சேகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details