ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு ஆன்லைன் மூலம் புதிதாக பிரபல நிறுவனத்தின் செல்போன் விநியோக உரிமம் தருவதாக தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் பிரபல நிறுவனத்திடம் விற்பனை விநியோக உரிமம் பெற மூன்று லட்சம் ரூபாய் செலுத்தும்படி கூறியுள்ளார்.
அதனை நம்பி, அப்துல் ரகுமான் முதலில் 15,200 ரூபாய், இரண்டாவது தவணையாக 49,000 ரூபாயை கர்நாடக மாநிலத்திலுள்ள வங்கி கணக்கிற்கு செலுத்திள்ளார். அதற்கு பிறகும் விற்பனை அங்கீகாரம் வழங்காததால் சந்தேகமடைந்த அவர் மறுபடியும் தொடர்பு கொண்டபோது, மேலும் மூன்று லட்ச ரூபாய் தந்தால் தான் விநியோக உரிமை தர முடியும் என்று கூறியுள்ளனர்.