தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தின் அருகே வேட்டையாடப்பட்ட 4 முயல்கள் மீட்பு: ஒருவர் கைது - ராமநாதபுரம்

ராமநாதபுரம்: முயல் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தின் அருகே வேட்டையாடிய 4 முயல் மீட்பு
ராமநாதபுரத்தின் அருகே வேட்டையாடிய 4 முயல் மீட்பு

By

Published : Apr 10, 2021, 10:15 AM IST

ராமநாதபுரம் அருகே முயல்கள் வேட்டையாடப்படுவதாக வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ராமநாதபுரம் வனக்காவலர் இ. ராஜசேகரன், வன பாதுகாப்பு படை வனக்காவலர் சடையாண்டி தலைமையில் வன காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டூரணி கிழக்கு கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வைத்திருந்த சாக்கு பையில் கால்கள் கட்டப்பட்டு உயிருடன் இருந்த 4 முயல்களை பறிமுதல் செய்தனர்.

சின்ன கலையமுத்தூர் சமத்துவபுரம் சரத்குமார், முயல்களை வேட்டையாடியது தெரிந்தது. இதனையடுத்து வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்ட முயல்களின் கால் கட்டுகள் அவிழ்த்து விடப்பட்டு முயல்களுக்கு தண்ணீர், இரை கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் கூண்டில் எடுத்துச் சென்று பறவைகள் சரணாலயத்தில் முயல்கள் விடப்பட்டன. முயல்களை வேட்டையாடிய சரத்குமாருக்கு, வன உயிரின காப்பாளர் மாரிமுத்து அறிவுரைப்படி அபராதம் விதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் சதீஷ் கூறினார்.

இதையும் படிங்க:ஐயப்பன் கோயில் நடை திறப்பு: சித்திரை மாத பூஜை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details