தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் - இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

ராமநாதபுரத்தில் கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரத்தில் கஞ்சா பறிமுதல்

By

Published : Dec 31, 2019, 6:47 PM IST


ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், அதிகாலை 3 மணிக்கு எஸ்.பி பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்ற அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் அருகே உள்ள சதுப்பு நிலக்காடுகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கஞ்சா மூட்டைகளை கைபற்றினர்.

ராமநாதபுரத்தில் கஞ்சா பறிமுதல்

தற்போது கஞ்சாவை கடத்த முயன்றவர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். ஒவ்வொரு மூட்டையிலும் நன்கு பேக்கிங் செய்யப்பட்ட 17 சதுர வடிவிலான பொட்டலங்களில் மொத்தம் 380 கிலோ கஞ்சா இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள்

ABOUT THE AUTHOR

...view details