தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனுஷ்கோடியில் பறிமுதல் செய்யப்பட்ட 3.5 கிலோ தங்கம் - தனுஷ்கோடியில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை க்யூ பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

1.5 crore gold smuggling in ramnad
1.5 crore gold smuggling in ramnad

By

Published : Feb 16, 2020, 10:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இலங்கையைச் சேர்ந்த படகு செல்வதை இந்திய கடற்படையினர் கவனித்துள்ளனர்.

இதனையடுத்து, படகிலிருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த அலோசியஸ், அந்தோனி சுகந்த், சகாய வினிஸ்ரோ என்பது தெரியவந்தது. இவர்கள் தங்கச்சி மடம் பகுதியிலுள்ள மீனவர்களிடம் கடத்தல் தங்கத்தை அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, படகின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் அளவுள்ள 35 கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 1 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 3.5 கிலோ தங்கம்

இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தியோனி, தனுஷியஸ் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த லட்சுமணன், சர்வேஸ்வரன் ஆகிய 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ. 86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details