தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 11:36 AM IST

ETV Bharat / state

மதுபோதை தகராறு: புதுக்கோட்டையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை!

புதுக்கோட்டை: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் மதுபாட்டிலால் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pudukkottai
pudukkottai

புதுக்கோட்டை அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் தணேஷ்குமார் (27). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவருடன் தணேஷ்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது தமிழரசன், தணேஷ்குமாரை மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கல்லைத் தூக்கிப்போட்டு கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டார். பின்னர் இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து தணேஷ்குமாரின் உடலைமீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது, தணேஷ்குமாரின் தம்பி, உறவினர்கள் கொலையைக் கண்டித்தும் குற்றவாளியை உடனே கைதுசெய்ய வலியுறுத்தியும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவலர்கள் சிறிய அளவில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தணேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, தணேஷ்குமாரை கொலைசெய்த தமிழரசன், கணேஷ் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் மதுபாட்டிலால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...!

ABOUT THE AUTHOR

...view details