வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பரப்புரையும் அனல் பறக்க நடந்துவருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் படு பிஸியாக தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரவணனிடம் சில நிமிடங்கள் பேசினோம்.
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததற்கான காரணம்?
2018ஆம் ஆண்டில் தான் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்தேன். கஜா புயலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டேன். அப்போது கட்சி மீது ஒரு ஈடுபாடு வந்தது. இதற்கிடையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ”ஏன் இந்தக் கட்சிக்குள் வர விரும்புகிறீர்கள்?” என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு, ”ஊருக்கு உழைத்திட ஒரு யோகம் வேண்டும். அதற்காக இக்கட்சியினை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்” என பதிலளித்தேன். அதற்கு மெல்லிய புன்னகை செய்தார், தலைவர் கமல்ஹாசன். இப்படித்தான் என் அரசியல் பயணம் தொடங்கியது.
அரசியலில் திரைக்கலைஞர்களின் பிரவேசத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சமூகத்தை சீர்திருத்துவதற்கான ஒரு கருவிதான் அரசியல். திரைக்கலைஞர் அரசியலுக்கு வந்தால் நல்லாவா இருக்கும் என்று எதிர்க்கட்சி தரப்பில் இருந்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஒரு நடிகர், ஜெயலலிதா ஒரு நடிகை, கருணாநிதி அவர்கள் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான். ஒரு கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போது, அது நமக்கு ரோல்மாடல் ஆகிறது. அப்படி இருக்கும்போது நடிப்புத் துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விராலிமலை தொகுதியின் பிரச்னைகள்?