தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னொளி கைப்பந்துப் போட்டி - முதல் பரிசைத் தட்டிச் சென்றது அல்லூர் அணி! - மின்னொளி கைப்பந்து போட்டி

புதுக்கோட்டை: அன்னவாசலில் நடைபெற்ற மின்னொளி கைப்பந்துப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்று சிறப்புடன் விளையாடின.

கைப்பந்து போட்டி

By

Published : Nov 25, 2019, 9:50 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆண்டுதோறும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திருப்பத்தூர், லால்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டு, விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை அல்லூர் அணியும், 2ஆவது பரிசை பாகனேரி அணியும், 3ஆவது பரிசை லால்குடி அணியும், 4ஆவது பரிசை அன்னவாசல் அணியும் தட்டிச் சென்றன.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தப் போட்டியை அன்னவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னவாசல் இளைஞர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details